webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Action
Not enough ratings
20 Chs

சுழல் 3

சரண் ,சபரி, தினேஷ், தர்ஷன் ஆகிய நால்வரும் பெரிய கொள்ளையர்கள் என்றும் சட்டவிரோதமாக பல செயல்களை செய்து வருகிறோம் என்றும் நாங்கள் வைத்திருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்ததால் தான் நாங்கள் ஐஸ்வர்யாவை கொன்றோம். அந்த பெட்டிக்குள் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றும், என்ன சாட்சிகள் இருக்குது என்றும், அவைகளை எப்படி அளித்தோம் என்றும், மற்றும் அதிக கொலைகளை எங்கே எப்போது செய்தோம் என்றும் அதில் உள்ளது அது பெட்டியை திறந்து ஐஸ்வர்யா பார்த்ததால் தான் நாங்கள் அவளை கொன்றோம் ஆனால் நாங்கள் ஐஸ்வர்யாவை கொன்றதை அவளுடைய தோழிகளான அஞ்சனா காவியா நேகா ஆகிய மூவரும் கண்ணால் பார்த்து விட்டனர் அதனால் உடனே அவர்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நாங்கள் திட்டம் போட்டோம், அதனால் நாங்கள் திட்டமிட்டபடி இந்த நால்வரையும் கொடூரமான முறையில் கொன்று விட்டோம். அந்த பலியை காட்டில் இருக்கின்ற அந்த சந்திரன் மீது போட்டு விட்டோம். இன்னொரு முக்கியமான விஷயம், கொடைக்கானலில் நடந்த அனைத்து வகையான கொலைகளுக்கும் நாங்கள்தான் காரணம் சந்திரன் இந்த கொலைகளை செய்யவில்லை அதற்கான அனைத்து ஆதாரங்களும் ஐஸ்வர்யா பார்த்த அந்த பெட்டியில் இருந்தது. அந்த பெட்டியை திறந்து ஐஸ்வர்யா பார்த்துவிட்டாள் அதனால் நாங்கள் மாட்டிக் கொள்வோம் என்று தெரியவந்தது அதனால் நாங்கள் அவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம்.அப்போது உடனே இனியன் உங்களுடைய நண்பர்களான ஆதவன், ராஜ் ,புவனேஷ், ஆகாஷ் ஆகிய உங்கள் சக நண்பர்களை கொன்றது நான்தான் என்றும் அவர்களைப் பழி வாங்கத்தான் நான் அனைவரையும் கொடூரமாக கொன்றேன் என்று கூறினான். இதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், உடனே சஸ்மிதா ஏன் அவர்களை கொன்றீர்கள் என்று கேட்டாள் அதன்பின் இனியன் தனக்கு நடந்த சோகத்தை கூறத் தொடங்கினான்.